செய்தி எரிபொருள் கதை ஏமாறாதீர்! July 10, 2022 -நஜீப்- 10.07.2022 முதல் நான்கு மாதங்களுக்குத் தேவையான எரி பொருள் நாட்டுக்கு வருகின்றது. அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் எதிரணியினர் மக்களைக் வீதிக்கு அழைக்கின்றார்கள் என்று புதிதாக ஆளும் தரப்புக்குப் போய் அமைச்சுப் பெற்றுக் கொண்ட மனுஷவும், ஹரினும் முதல் நாள் (05.07.2022) நாடாளுமன்றத்தில் கதை சொன்னார்கள். ஆனால் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன அடுத்தநாள் (06.07.2022) 23ம் திகதிக்குப் பின்னர்தான் எரிபொருள் கப்பலை எதிர்பார்க்க முடியும் என்று சொன்னார். அதில் கூட நம்பகத் தன்மை கிடையாது. எனவே அமைச்சர்கள் வாய்க்கு வருவதை எல்லாம் போசிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று நாங்கள் குடிகளிடத்தில் ஒருவார்த்தை சொல்லி வைக்க விரும்புகின்றோம். இந்தியா கூட இலங்கைக்கு உதவுகின்ற விடயத்தில் மூச்சுவாங்கிக் கொண்டிருப்பதாகத் தகவல். அவர்களுக்கும் போதும் என்ற நிலையாம்.! மேலும் இந்த அரசுக்கு ஆயுல் கம்மி, இவர்களுடன் கொடுக்கல்வாங்கல் செய்வது ஆபத்து என்று அவர்கள் கணக்குப் பார்ப்பதாகவும் தகவல். நன்றி:10.07.2022 ஞாயிறு தினக்குரல் Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in March 13, 2026March 13, 2026 இசுரேல் இப்போ ம..ரண அடி வாங்க காரணமே ஜெராட் குஷ்னர் தான்? | March 12, 2026March 12, 2026 மொசாட் உளவாளிகள் பற்றி அதிரடித் தகவல்கள்! March 12, 2026March 12, 2026 ஈரானின் முக்கிய KHARG ISLAND March 12, 2026March 12, 2026 Mosquito Fleet Vs Ghost Fleet March 12, 2026March 12, 2026 ஈரானின் 42-வது அலைத் தாக்குதல் ஆரம்பம் March 12, 2026 ஈரான் போட்ட இறுதி எச்சரிக்கை! Previous Story களத்துக்கு வரும் காத்தனார்! Next Story 'நீதி'