ஊர் போக அமைச்சு வேண்டும்!

-நஜீப்-

ஆளும் தரப்பு கொந்தளிப்பாக இருக்கும் இந்த நேரத்தில் வெற்றிடமாக இருக்கின்ற அமைச்சை பெற்றுக் கொள்வதற்கு பெரும் போட்டி. இது தொடர்பாக நமக்குக் கிடைத்த ஒரு சுவையான கதையை பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுகின்றது.

மீன்பாடும் மாவட்டத்தில் இருந்து ஏழு தலையாருக்குப் பெரும் தொல்லையாம். தான் இருபதுக்கு கைதூக்கியதற்கு அமைச்சு ஒன்று கிடைக்கின்றது என்று நெடுநாளாக ஊரில் சொல்லி வந்திருக்கின்றோன். அதனால்  நீங்கள் எப்போது அமைச்சராவது என்று மக்கள் தன்னிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஊர்ப் பக்கம் தலைகாட்ட முடியாதிருக்கின்றது. இடைவெளியாக இருக்கின்ற இராஜங்க அமைச்சில் ஒன்றை கண்டிப்பாகத் எனக்குத் தந்தே ஆகவேண்டும் என்பது அவர் முன்வைக்கும் வாதம்.

பக்கத்து மாவட்டத்தில் சீனியர் ஒருவரும் இதற்குப் போட்டியாம். இதனால் ரஜரட்டைக்காரருக்கு இது போனாலும் போகலாம் என்று ஒரு தகவல். சிறைக்குப் போய் தலையில் துப்பாக்கி வைத்தவருக்கும் அதிஷ்டம் வாய்திருக்கின்றது.

நன்றி: ஞாயிறு தினக்குரல் 13.03.2022

Previous Story

நூலறுந்த காற்றாடியின் நிலைமையில் அரசாங்கம்!

Next Story

சவுதியில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை