ஊரடங்கு உத்தரவு சட்டத்திற்கு முரணானது-சுமந்திரன்

இலங்கை சட்டத்தில்“பொலிஸ் ஊரடங்கு” என்று எதுவுமே கிடையாது.கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நாளை நடைபெற இருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டவிரோத அறிவிப்பு என  நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் விசேட காணொளியொன்றினை வெளியிட்டு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டவிரோதமான அறிவிப்பு எனவும் விளக்கமளித்துள்ளார்.

Previous Story

தம்மிக்க அமைச்சர் பதவி உடனடியாக பறிக்க வேண்டும்! ரணில்

Next Story

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை