உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு கொலைகள் 48 ஆவது நினைவு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.

அந்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின் போது வன்முறைக் கும்பலொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  tw

Previous Story

மூடிய அறைக்குள் சிறிதரன்- சுமந்திரன் லடாய்

Next Story

மனக் கசப்பின்றிய எமது உயிர் தோழன் சீனா- பிரதமர் புகழாரம்