-நஜீப்-
ஐ.தே.க.வுக்கு நெடுநாள் தலைவராக இருந்து கட்சியை முன்னெடுத்துச் செல்கின்றார் ரணில்.! அவருக்குப் பின் நெருங்கிய உறவினர் கட்சிக்குத் தலைவர். இதற்கு முன்னர் ரணில் இந்த அரசாங்கத்தை ஐ.தே.க. கைப்பற்றுவது பற்றி சொல்லி இருந்தார்.
அவர் பாணியின் பிரதித் தலைவராக நியமிக்பட்டிருக்கின்ற உறவினர் ருவன் விஜேவர்தன நமக்கு இந்த வார நகைச்சுவையை வழங்கி இருக்கின்றார். அவர் கருத்துப்படி இந்த அரசாங்கம் வீழ்கின்ற நேரத்தில் இந்த நாட்டு மக்களை ஐ.தே.க.வால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்பதுதான் அவரது கண்டுபிடிப்பு.
இதே ரணில் செல்வாக்காக இருந்த நேரம் மு.கா. தலைவர் ஹக்கீம் அவரை ஞானி என்று புகழ்ந்து தள்ளியதும் நினைவிருக்கும். இந்தியப் பிரதமருக்கு அனுப்பும் கடிதத்துக்கு ஒப்பம் போடுவது பற்றி ஞானியிடம் ஒரு சின்ன ஆலோசனை தனித்துவத்தார் பெற்றிருக்கலாமே!
-நன்றி ஞாயிறு தினக்குரல் 09.01.2022