-நஜீப்-
உங்கள் கூட்டணியில் இணைந்து கொள்ள டலஸ் மற்றும் பீல்ட் மார்ஷல் பென்சேக்க போன்றவர்கள் தயாராக இருப்பதாக சொல்லப்படுகின்றதே என்று ஜேவிபி தலைவர் அனுராவைக் கேட்டால் பலர் தயாராகத்தான் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அழைப்பை விரைவில் கிடைக்கும் அதற்கு பல கட்டுப்பாடுகளும் இருக்கும். அதே நேரம் கட்சிகளுடன் நமக்கு எந்தக் கூட்டணிகளும் கிடையாது.
கட்சிகளில் இருந்து துரத்தப்படுவோரை நாம் சேர்த்துக் கொள்ளத் தயாராக இல்லை. வருவோரின் அரசியல், சமூகப் பின்னணிகள் பற்றி நாம் ஆராய்ந்து தான் ஆட்களை உள்வாங்குவது பற்றி நாம் முடிவுகளை எடுக்க முடியும் என்பது அவர் பதிலாக இருந்தது.
அத்துடன் தம்மை வந்து சந்தித்த மேற்கு நாடுகளின் இராஜதந்திரிகளிடம் நாம் அவர்களுடைய பக்கச் சார்பு பற்றியும் கேள்விகளை எழுப்பி இருக்கின்றோம். உதாரணத்துக்குச் சொல்வதாக இருந்தால் ஜனாதிபதி ரணிலின் ஜனநாயக விரோத செயல்பாடுகளின் போது ஏன் நீங்கள் மௌனம் என்று அவர்களிடம் கேட்டு எமது எதிர்ப்பையும் கண்டனங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம்.
நன்றி: 25.02.2024 ஞாயிறு தினக்குரல்