-நஜீப்-
தமிழ் மக்களின் வேட்பாளர் அரியநேந்திரனின் தேர்தல் பரப்புரைகளில் குறைபாடுகள் இருப்பதாக நமக்குத் தோன்றுகின்றது. தெற்கு பரப்புரைகளுடன் ஒப்பு நோக்கின்ற போது அவை கவர்ச்சி குறைந்ததாகத்தான் இருந்து வருகின்றன. அதனை நமக்குப் புரிந்து கொள்ள முடியும்.
அடுத்து ஒட்டுமொத்த சமூகமும் இன்னும் ஒர் அணியில் இணையவில்லை. கோடாரிக் காம்புகள் தமது தொழிலைச் செய்து கொண்டிருக்கின்றன. பரப்புரைக்கு ஒரு நிகழ்ச்சி நிரலை தலைவர்கள்-சிவில் அமைப்புக்கள் வைத்திருக்கும். அது எந்தளவுக்கு நேர்த்தியானது என்பது நமக்குத் தெரியாது. அதன் அவசியமும் நமக்குக் கிடையாது.
உலகம் பூராவிலும் உள்ள தமிழ் இனத்தின் சமூக ஊடகங்கள் பொது வேட்பாளரைத் தூக்கிவிடுகின்ற பணிகளைக்கூட இன்னும் ஆரம்பிக்கவில்லை. இதற்கு பெரிதாக காசு தேவை இல்லை. தமது தனிப்பட்ட முகநூல்கள் இணைத்தளங்களைக் கூட இதற்குப் பாவிக்கலாம்.
குறிப்பாக வேட்பாளர் அரியநேந்திரணின் புகைப்படங்களைக் கூட தேடிப் பார்த்தால் அங்கு இதுவரை பெரிதாக ஏதுவுமே இல்லை என்ற நிலை இருக்கின்றது. இந்தச் சின்ன விடயத்தில் கூட கவனம் தேவை.
நன்றி 01.09.2024 ஞாயிறு தினக்குரல்