அப்பா வீட்டுக்கு வாந்திடுங்கோ மகன் மனோஜ் ராஜபக்ச மன்றாட்டம்!

ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை தயவுசெய்து நாட்டை விட்டு வந்துவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபயவின் மீது உச்சக்கட்ட கோபத்தில் மகிந்த ராஜபக்ச உள்ளமையினால் குடும்பத்திற்குள் குழப்பம் வேண்டாம் எனவும், கோட்டாபய மகன் மனோஜ் ராஜபக்ச தந்தைக்கு தொடர்ச்சியாக அழுத்தத்தினை பிரயோகித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

அரசாங்கத்திற்கெதிரான தீவிரமடைந்துள்ள மக்கள் போராட்டத்தினால் குடும்பத்திற்குள் குழப்பம் ஏற்படுவதினை மனோஜ் ராஜபக்ச விரும்பவில்லை என்றும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய மகன் மனோஜ் ராஜபக்ச அமெரிக்காவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஊரடங்கு உத்தரவு! பங்காளி கட்சிகள் கடும் எதிர்ப்பு!!

Next Story

மக்களுக்காக குரல் கொடுத்த ஹீரேவுக்கு நேர்ந்த கதி!