வவுனியாவிற்கு நாளைய தினம் வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்.
பிரச்சார கூட்ட ஏற்பாடுகள்
அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த ஏற்பாடுகள் இடம்பெறும் இடத்திற்கு சென்ற றிசாட் பதியுதீன், அவற்றை பார்வையிட்டிருந்ததுடன், அங்கு நின்ற சிலருடன் உரையாடியும் இருந்தார்.
ஏற்கனவே, றிசாட் பதியுதீன், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு என அறிவித்த நிலையில், குறித்த இடத்திற்கு சென்று ரணில் விக்ரமசிங்கவின் பிரச்சார கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டமை அவரது ஆதரவு யாருக்கு என சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.-நன்றி தமிழ்வின்