‘ஆளைத்’ துரத்துங்கள்!

-நஜீப்-

கடும் அதிர்ப்தியில் இருக்கின்ற சு.கட்சி முக்கியஸ்தர்கள் பலர் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை சந்தித்திருக்கின்றார்கள். அவர்கள் அங்கும் இங்கும் என்றுதான் தீர்மான விடயத்தில் உறுதியில்லாமல் அலைவதைப் அம்மையார் பார்த்தார்.

ஒன்றில் நேரடியாக என்னுடன் வந்து இணைந்து கொள்ளுங்கள் அல்லது, அங்கிருப்பதானால் முதலில் மைத்திரியை கட்சியில் இருந்து விரட்டி விட்டு என்னை அழையுங்கள்.

இன்று இந்த நிலை கட்சிக்கு வர முக்கிய காரணம் மைத்திரி சந்தர்ப்பவாத அரசியலும் மஹிந்தவின் அரசியல் பலிவாங்கும் குனமும் என்று அவர்களிடத்தில் சந்திரிக்கா எடுத்துக் கூறினார்.

அழைப்புக் கொடுக்கப் போனவர்களினால் எந்தப் பதிலையும் கொடுக்க முடியாமல் போக, இன்னும் சில காலம் காட்சிகளைப் பார்த்தக் கொண்டு மௌனமாக இருப்போம் என்று அவர்கள் தமக்குள் பேசிக் கொள்ள, ஒருவர் மௌனத்துடன் ஆயுலும் முடிந்து போகும் என்று கூற அதற்கு யாருமே மாற்றுக் கருத்துக் கூறவில்லை.

-நன்றி: ஞாயிறு தினக்குரல் 30.01.2022

Previous Story

இந்தியாவுடன் ஆழமான நட்பு: இஸ்ரேல் பிரதமர் பெருமிதம்

Next Story

இராணுவ பாதுகாப்பை விட          JVP பாதுகாப்பு பலமானது