லிபியா பிரதமரை கொல்ல முயற்சி 

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் பிரதமர் அப்துல்லா மிட் – அல் டிபிபாவை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது. இதில் அவர் உயிர் பிழைத்தார்.

லிபியா பிரதமர் டிபிபா, தலைநகர் திரிபோலியில் தன் வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சிலர், அவர் கார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், கார் கதவுகள் மீது குண்டுகள் பாய்ந்தன. எனினும் பிரதமர் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், துப்பாக்கி சூடு நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

Previous Story

நீதிக்கான நம்பிக்கையை நசுக்கியுள்ள பா.ஜ., அரசு: பிரியங்கா

Next Story

இலங்கைக்கு நரேந்திர மோதி அடுத்த மாதம் பயணம்! நெருக்கடி தீர உதவுமா?