-நஜீப்-
2024 ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புச் செய்ய இன்னும் ஐந்து மாதங்கள் வரைதான் இருக்கின்றது. அதனைத் தடுக்க ஒரு சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி அந்தத் தேர்தலைப் பின்போட இடமிருக்கின்றது என்ற ஒரு அச்சம் நாட்டில் இருக்கின்றது. இதற்கு வாய்ப்பே கிடையாது.
இப்போதைக்கு அது காலங் கடந்த ஒரு சிந்தனை. இப்படிச் சொல்லி இருக்கின்றார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா. அத்துடன் இன்று பிரசன்ன ரணிலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றார். அவரது தந்தை ரெஜி ரணதுங்காவை எனக்கு நன்றாகவே தெரியும்.
1977ல் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அவர்கள் வீட்டை எரித்தவர்தான் இந்த ரணில். அவர்கள் பிழைப்புக்காக ஒரு சினிமா தியேட்டரும் இருந்தது. அதனையும் இவர்கள் எறித்தனர். இதனால் தொந்தரவுகள் தாங்க முடியாது ரெஜி ரணதுங்க தனது பிள்ளைகளை எடுத்துக் கொண்டு கொழும்புக்கு குடும்பத்துடன் வந்து விட்டார். அப்போது இந்த பிரசன்ன சிறு பையன்.
இப்படி வரலாற்றை ஊடகங்களில் நினைவு படுத்துகின்றார் சரத் என் சில்வா. குளத்தில் நீர் வற்றுகின்ற போது மீன்கள் சகதிக்குள் போய் தலையை நுழைக்கின்ற வேலையைச் செய்வது போலத்தான் ரணில் செயல்பாடுகள் இப்போது இருக்கின்றது.
நன்றி: 25.02.2024 ஞாயிறு தினக்குரல்