-நஜீப்-
தன்னைப் பற்றி இந்த நாட்களில் வெளிவருகின்ற செய்திகளில் எந்த உண்மைகளும் இல்லை. தான் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க இருப்பதாகவும், சுதந்திரக் கட்சி தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து அதற்குத் தலைமை தாங்க இருப்பதாகவும் வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையுமில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அறிக்கை விடுத்து மறுக்கின்றார்.
அத்துடன் கதிரை மற்றும் வெற்றிலை சின்னங்களுக்கு வழக்குகள் இருப்பதால் மு.கா. ஹாபிஸ் நாசீரின் இரட்டை இலைச் சின்னத்தில் ஒரு கூட்டணி என்றும் கதை. தற்போது அரசியல் பரப்புரைகளுக்காக அரசியல் செயல்பாட்டாளர்கள் சமூக ஊடகங்கள் பலவற்றை விலைக்கு வாங்கி தமக்குத் தேவையான வகையில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இதற்கிடையில் சஜித் மலையக கட்சிகள் பலவற்றுடன் சில தினங்களுக்கு முன்னர் கூட்டணி அமைத்திருக்கின்றார். இது ஒன்றும் புதிய செய்தியல்ல. அவர்கள் அனைவரும் கூட்டணி போட்டாலும் போடாவிட்டாலும் சஜித்துடன்தான் இருந்தார்கள்-இருப்பார்கள். அவர்கள் அரசியல் பிழைப்புக்கு வேறு மார்க்கங்கள் இல்லை என்பதுதான் அந்தக் கூட்டணியின் யதார்த்தம்.
நன்றி: 18.02.2024 ஞாயிறு தினக்குரல்