ஹிஸ்புல்லாஹ் பெரும் நயவஞ்சகன் முனாபீக்-ஹக்கீம்

ஹிஸ்புல்லாஹ் எப்படி மோசமான ஒரு நயவஞ்சகன்-முனாபீக்கு என்பது தொடர்பில் ஒரு கூட்டத்தில் ஹக்கீம் பேசிய வார்த்தைகள் இவை. நாம் அறிந்த வரையில் ஒரு முஸ்லிம் தலைவர் இப்படியான வார்த்தைகளில் கேவலமாக ஒரு மனிதனை அவமானப்படுத்த முடியுமா என்ற அளவில் ஹக்கீமின் வார்த்தைகள் ஹிஸ்புல்லாஹ் மீது அமைந்திருந்தன.

அதனை யூடியூபில் இன்றும் பார்க்கலாம். ஆனால் அவர்கள் இன்று நெருங்கிய சகாக்கள். ஹிஸ்புல்லாஹ் என்னதான் சந்தர்ப்பவாதியாக இருந்தாலும் ஹக்கீம் போன்ற ஒரு தலைவர் இப்படி எல்லாம் அநாகரிகமான வார்த்தைகளில் கலாநிதி ஹிஸ்புல்லாவை கேவலப்படுத்தி இருக்கக் கூடாது.

அது அப்படி இருக்க அதனை நியாயப்படுத்தும் வகையில் ஹிஸ்புல்லாஹ் அரசியல் இன்றும் தொடர்கின்றது. ஹக்கீம் கருவறைக் கதை கலைந்து போக, அணுர அதிகாரத்துக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு நோன்பு கிடையாது பெருநாள் கிடையாது அவர்களின் சமய உரிமைகள் இல்லை.

இப்படித்தான் சீனாவிலும் நடக்கின்றது என்று அணுரவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை சிதைக்க முனைகின்றார் ஹிஸ்புல்லாஹ். ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் அணுர ஆதரவு அணை உடைந்த வெள்ளமாக இருக்கின்றது.

சீனாவில் அனைத்து இனங்களுக்கும் ஒரு பொதுப் பெருநாள்தான் அப்படித்தான் அணுரா வந்தலா நடக்கும் என்ற இந்தக் கதை எவ்வளவு உண்மைக்கு முரணானது என்பதனை கையடக்கத் தொலைபேசி வைத்திருக்கின்ற எவரும் பார்த்துக் கொள்ள முடியும்.

சீனாவில் முஸ்லிம்களின் நோன்பு மற்றும் பெருநாள் என்று யூடியூபில் தட்டிப்பார்த்தால் உண்மையைக் கண்டு கொள்ள முடியும். நாட்டில் இன ஐக்கியத்துக்கான ஒரு வாரம் பற்றிய அணுர கதையை எப்படி காலநிதி ஹிஸ்புல்லாஹ் மாற்றிப் பேசி வருகின்றார் என்பதனை முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும்.

ஹிஸ்புல்லாஹ்வின் இந்த பேச்சு இப்போது சீனத் தூதுவராலயம் வரை போய் விட்டது. அவர்களது இந்தக் கதைகளும் ஹக்கீம் சொல்லி இருக்கின்ற படி ஹிஸ்புல்லா ஒரு பொய்யன் நயவஞ்சகன் என்பதனை அவர் மீண்டும் முஸ்லிம்களுக்கு உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

அதற்காக ஹக்கீம் ஹிஸ்புல்லாஹ் பற்றிய கேவலமாக பேசிய வார்த்தைகளையும் நாம் ஏற்க முடியாது.

Previous Story

நாட்டில் செப்.21ல் புள்ளடிப் புரட்சி

Next Story

இந்திய விரோத அமெரிக்க பெண் எம்.பி.யுடன் ராகுல் சந்திப்பால் சர்ச்சை