-நஜீப் –
கதை சொல்கின்ற போது அதனைப் புத்தி கூர்மையுடன் கட்டாயம் ஆராய வேண்டும். குறிப்பாக இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் அனைவரும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதில் மிகவும் கைதேர்ந்தவர்கள். இப்படியான ஒரு கதைதான் இது. நவீன் திசாநாயக்க தற்போது ஜனாதிபதி ரணிலிடத்தில் ஆளுனர் பதவிவை வாங்கிக் கொண்டு சப்ரகமுவ–இரத்தினபுரியில் உல்லாசமாக இருக்கின்றார்.
சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதித தேர்தலில் முக்கோணப் போட்டி. அணுர, சஜித், ரணில் ஆகியோருக்கிடையில்தான் கடும் போட்டி என்பது அவர் கருத்து. மொட்டுக் கட்சியில் யாருமே இல்லை போலும்.!
ஆனால் இந்த ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் ரணில்தான் இறுதியில் வெற்றி பெறுவார் என்பது அவர் கருத்தாக இருக்கின்றது. நவீன் ரணிலுக்கு நன்றிக் கடன் பட்டவர் என்பது உண்மைதான். ஆனால் பொது மக்கள் கருத்துக்களுக்கும் நவீன் கருத்துக்களுக்கும் ஏதாவது ஒரு நம்பகத் தன்மை இருக்கின்றதா என்று குடிகள்தான் சிந்திக்க வேண்டும்.
நன்றி: 19.05.2024 ஞாயிறு தினக்குரல்