-நஜீப்-
தன்னுடன் விவாதத்துக்கு வருமாறு இப்போது எல்லோரும் ஜேவிபி. தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை அழைத்து கூக்குரல் போடுவது நமது அரசியலில் ஒரு பெஷனாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. தன்னை ஒரு ஜனாதிபதி வேட்பாளர் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கும் திலித் ஜயவீர தன்னுடன் அனுரகுமாரவை விவாதத்துக்கு வருமாறு ஊடகங்கள் மூலமும் தனது அரசியல் மேடைகளிலும் தொடர்ச்சியாக அழைப்புக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.
அதே போன்று புட்நோர்ட் சுஜிவாவும் அவரை விவாதத்துக்கு அழைக்கின்றார். புதிதாக மஹிந்தவின் தம்பி என்று சொல்லிக் கொள்ளும் உதயங்க வீரதுங்ஹவும் சில தினங்களுக்கு முன்னர் அனுராவை பகிரங்க விவாதத்தக்கு அழைத்திருக்கின்றார்.
இந்த அழைப்பு மூலம் தமக்கு ஒரு விளம்பரத்தை தேடிக் கொள்ளத்தான் இவர்கள் முனைகின்றார்கள். இதனைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒன்றும் அனுரவோ அவரது அரசியல் இயக்கமோ ஒன்றும் முட்டால் கிடையாது.
சமகால அரசியலிலும் நாடாளுமன்ற விவாதங்களிலும் அனுரா தனிக் குதிரையாகத் தான் களத்தில் இருக்கின்றார். அவருக்கு நிகர் அவரே என்ற நிலை. பூவோடு சேர்ந்து நாரும் கதைதான் இந்த முயற்ச்சிகள் ஐயோ பாவம் ஆளை விட்டு விடுங்கள்.
நன்றி: 03.03.2024 ஞாயிறு தினக்குரல்