இலங்கையில் உள்ள தனியார் வங்கிகளுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களில் மூன்றில் ஒரு பங்கை இலங்கை மத்திய வங்கி (Cenral Bank of Srilanka) பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அரசுக்கு பெற்றுக்கொள்ளும் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
மருந்து, மருத்துவ உபகரணங்கள், எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இந்த பணத்தை இலங்கை மத்திய வங்கிக்கு வழங்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக அத்தியசிய உணவு, மருந்து, எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கை அரசாங்கம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து கைமாற்று உடன்படிக்கை மூலம் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.